News

பாடசாலை போக்குவரத்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதும் ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் செய்யாததால் பாடசாலை போக்குவரத்துக்கான கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என அகில  இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று(03.07.2024) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக வாகனங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, பாடசாலை மாணவர்களை தொடர்ந்து ஏற்றிச் செல்வதற்கு அரசாங்கம் கடனுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குழந்தைகளை சரியான நேரத்தில் பாடசாலைக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் அழைத்துச் செல்வதை உறுதி செய்யும் வகையில் தொழிற்சங்கம் செயல்படுவதால், இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button