News

வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நாடும் முன்னதாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், முகவர் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பின், குறித்த முகவர் நிலையம் தொழில் கோரல் உத்தரவைப் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

மேலும், 1989 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியும் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் குறித்த தகவல்களை, பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button