News

வீட்டு வாசலுக்கே வரும் மருத்துவ நிபுணர்கள் : இலங்கை மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

இந்தியாவின்(india) அப்பல்லோ(apollo) மருத்துவமனையில் உள்ள பிரபல மருத்துவ நிபுணர்களை இலங்கையில்(sri lanka) இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற சிறப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல நிபுணர்களை லங்கா இ-டாக் போன் மூலம் அழைத்து மருத்துவ ஆலோசனை பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொற்று நோய்கள், தொற்றாத நோய்கள், இதய அறுவை சிகிச்சை மற்றும் சிறப்பு மருத்துவ நிலைமைகள் குறித்து அந்தந்த நிபுணர்களிடம் பேசி நோயாளிகளை மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்கும் பரிந்துரைக்க முடியும் என்றும் நிர்வாகம் கூறுகிறது.

இதன்படி, இலங்கை நோயாளிகள் 1305 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்தியாவின் அப்பல்லோ வைத்தியசாலையின் விசேட வைத்தியர்களை தொடர்பு கொள்ள முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குச் சென்று நிபுணத்துவ மருத்துவர்களைச் சந்திப்பது போன்ற சிக்கலான செயல்முறையுடன் ஒப்பிடும்போது, ​​அப்பல்லோவின் சர்வதேசத் துறைக்குப் பொறுப்பான ஜிது ஜோஸ் அவர்களை இலங்கையிலிருந்து தொடர்புகொள்வது இலங்கை மக்களுக்கு கிடைத்த ஒரு சிறப்புப் பாக்கியமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button