News

மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) மீண்டும் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்களில் குறித்த விஜயத்தை மேற்கோள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துடன் பல சந்திப்புக்களும், 3 ஆம் திகதி கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று 4 ஆம் திகதி முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் விசேட கலந்துரையாடலுடன் காணி உறுதி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button