News

வடக்கில் இ.போ.ச தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இதன் முதற்கட்ட நிகழ்வு நேற்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், முதல் 29 பேருக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வழங்கி வைத்துள்ளார்.

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ( Chavakachcheri Base Hospital) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button