News

இணையம் மூலம் தொடருந்து இருக்கை முன்பதிவு: பொதுமக்களுக்கு வெளியான தகவல்

இணையம் மூலம் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் முறை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் முன்பதிவு செய்யும் முறைமை செப்டம்பர் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தொடருந்து திணைக்களம் (Department of Railways ) தீர்மானித்துள்ளது.

குறித்த தகவலை தொடருந்து திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தொடருந்து இருக்கை முன்பதிவு முறை செப்டம்பர் 1ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதுள்ள முறைக்கமைய, இருக்கை முன்பதிவு இரவு 7 மணிக்கே ஆரம்பமாகிறது.

எனினும், புதிய முறைப்படி, முன்பதிவு நேரம், முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button