News

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மாவின் விலையை குறைக்க அரசாங்கம் அழுத்தம் கொடுத்தால் 100 ரூபாவிற்கு பாணை விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாண் ஒன்றின் விலை 130 ரூபாவிற்கு விற்பனை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பாண் விலைக்  குறைப்பு தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் சோதனை

450 கிராம் பாண் ஒன்றின்130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை அண்மையில் அறிவித்திருந்தது.

தற்போது பாண் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறதா என நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், பேக்கரி உரிமையாளர்கள் தேவையான எடையில் பாணை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்தால் பாணை 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது பேக்கரி உரிமையாளர்களின் பின்னால் தாவாமல் கோதுமை மாவின் விலையை குறைப்பதே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோதுமை மாவின் விலையை கணிசமான அளவு குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button