News

பொதுச் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்து தகவல்!

அரசாங்க சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதனை ஒப்படைக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பதவிகளில் இருக்கும் போது அரசு வழங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அந்த பதவிகளை விட்டு விலகிய பிறகு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக பல புகார்கள் வந்துள்ளன.

அவ்வாறே பயன்படுத்தப்பட்டால் உடனடியாக அவற்றை மீளப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 41 மற்றும் 111 இன்படி, எந்த ஒரு நபரும் உரிய சொத்தை அரசிடம் ஒப்படைக்காதது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று சம்பந்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button