News

ஜனாதிபதித் தேர்தலில் ரிஷாட் பதியூதீனின் ஆதரவு குறித்து வெளியாகவுள்ள தகவல்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து பொது மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலானது மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தவகையில் இன்றையதினம் (10) வவுனியா, மன்னார், புத்தளம் பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button