News

பாடசாலை விடுமுறை தொடர்பில கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை 2024 ஆம் ஆண்டு நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை 16.08.2024 வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

இதனை  தொடர்ந்து,  மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதல் கட்டம் 26.08.2024 திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button