News

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

எதிர்வரும் பெரும்போகத்திற்காக நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(22) செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.

விவசாய நிலத்திற்கான கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இந்த மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சலுகைகள் இன்று (22.8.2024) முதல் நடைமுறையாகும் வகையில் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button