News

சஜித் தரப்பிலிருந்து மேலும் மூவர் ரணில் தரப்புக்கு செல்ல திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

மூவரும் ஒரே தடவையில் அல்லாமல், தனித்தனியாக ரணில் தரப்பிற்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் ஊடக அவதானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டு, தலதா அத்துகோரள பாணியில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சஜித் தரப்பிலிருந்த பலர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button