News

கட்டிட நிர்மாணத்துறைசார் நிபுணர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு!

இலங்கையில் மேசன் உட்பட நிர்மாணத்துறை நிபுணர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதற்காக இரவு நேர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் நேற்று (30) அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய மாநாடு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button