News

இலங்கையில் புதிய வேலை வாய்ப்புகள் : ஜனாதிபதியின் அறிவித்தல்

இலங்கையில் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் தொழில் வல்லுநர்களுக்கு வரியில்லா சேவை சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

மறைமுக வரிகளால் பலர் அவதிப்படுகின்றனர் இதனால் மறைமுக வரிகளை முறையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்போம்.

நமது பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது ஆனால் இன்னும் செய்ய வேண்டியுள்ளது ஆகையால் எனது திட்டம் முதலீட்டை வரவேற்கிறது.

நமது பொருளாதார முன்னேற்றம் என்பது நிலையான மற்றும் உற்பத்தியான எதிர்காலத்தை குறிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button