News

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான சுமூகமான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகள் குறியிடப்பட்டமை தொடர்பில் இதுவரையில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இம்முறை அதிகமானோர் தபால் மூல வாக்குகளை பயன்படுத்தியமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்றுடன் நிறைவடைந்துள்ள போதிலும், வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு கடந்த 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையொன்றை போலியாக தயாரித்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக காட்சிகளை படம்பிடித்த நபர் ஒருவர் கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button