News

மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியம் இரத்து

மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவித்தலின் பிரகாரம் செப்டெம்பர் 11ம் திகதி முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெற மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button