News

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்

2025 பெப்ரவரியில் கொண்டு வரப்படும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் முதலாவது மக்கள் பேரணி நேற்று தங்காலையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“துணிச்சல் மிக்கவர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துள்ளோம்.ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதே எங்களின் மிகப்பெரிய சவாலாக இருந்தது.மிகக் குறுகிய காலத்திற்குள், நாட்டுக்கு சாதகமான ஜனநாயக அமைப்புகளுடன் மிகச் சிறந்த ஒப்பந்தங்களைச் செய்து நம்பகமான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளோம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஏழைகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நிச்சயமாக அதிகரிப்போம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button