News

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வேலைத்திட்டம்!

‘Nation Branding campaign’ என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க நேற்று (04) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஐந்து பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில், Nation Branding campaign என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக உயர்த்தி 10 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button