News
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான தகவல்
2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி, பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளம் ஊடாக ஏற்றுக் கொள்ள பரீட்சைகள் திணைக்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 31 ஆம் திகதி முதல் மார்ச் 13 ஆம் திகதி வரை உரிய விண்ணப்பங்களை கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.