News
குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பு
நாட்டில், குரங்குகளால் ஏற்படும் தென்னை பயிர்களின் அழிவை நிவர்த்தி செய்யும் நோக்கில், அரசாங்கம், முதல் தடவையாக குரங்குகளின் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த முயற்சியுடன், 2025,பெப்ரவரி 15 அல்லது 22 ஆம் திகதிகளில் இந்த கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குரங்குகள் காரணமாக, 2024 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான தேங்காய்கள் அழிக்கப்பட்டதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தை கணிசமாக பாதித்ததாகவும் சமீபத்திய அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குரங்குகளின் எண்ணிக்கையை நிர்வகிப்பதையும், தேங்காய் உற்பத்தியில் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.