News

வரவுசெலவுத் திட்டத்தில் நிவாரணம் பெறப்போகும் வைத்தியர்கள்

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாரதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவையில் 2,800 சிறப்பு வைத்தியர்கள் இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 2,000 பேர் மட்டுமே இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு முதன்முறையாகக் கூடியபோது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button