News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இலங்கையர்களுக்கு வெளியான நற்செய்தி

ஜப்பானில் தாதியர் துறையில் இலங்கையர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஐ.எம். ஜப்பானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக இந்த வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அதன்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை இலவசமாகப் பெற தகுதியுடையவர்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த வேலைவாய்ப்பு வாய்ப்புகள் 5 வருட காலத்திற்குக் கிடைக்கும் என்பதுடன், குறைந்தபட்ச சம்பளம் 400,000 இலங்கை ரூபாய் கிடைக்கும் எனவும் தெரியவருகிறது.