News
எரிபொருள் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ள அரசாங்கம்

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (01) நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த கட்டத்தில், நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜெயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.