News
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்

நாளை (17) முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பு தற்போது பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்று வருகிறது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெறுகிறது.
2024 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L Exam) மார்ச் மாதம்17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
அத்துடன் சாதாரண தரப் பரீட்சை 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.