News

விசாரணைக்கு தயார்..! ரணில் அதிரடி அறிவிப்பு.!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

எனினும், சிங்கள-இந்து புத்தாண்டு காலத்தில் ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேறு திகதியை கோர நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியும் அவரது வழக்கறிஞர்களும் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு முதிர்ச்சியடைவதற்கு முன்னர் அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு கணக்குகளை திரும்பப் பெற்றதன் மூலம் ஊழல் செய்ததாகக் கூறி, சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக, ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பான தகவல்களை ரணில் விக்ரமசிங்க அறிந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பான சம்பவத்தில் அவர் தலையிட்டுள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ரணில் விக்ரமசிங்க அளித்த உண்மைகளை சரிபார்க்க, தொடர்புடைய ஆவணங்களுடன் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணையம் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button