News

கடவுச்சீட்டு பெற செல்லவிருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அத்துடன், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button