News

உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை சமர்ப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்பாளர்கள், தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்த தனித்தனி அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, போட்டியிட்ட மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அதிகாரியிடம் இந்த வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்தார்.

இதேவேளை, வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க (Manjula Gajanayake) சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button