News

அரச ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன்களை வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று (09) வெளியிட்டுள்ளது.

சுற்றிக்கையின் படி, அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன்களை வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பை தற்போதைய ரூ. 250,000/- இலிருந்து ரூ. 400,000/- ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button