News

குரங்கின கணக்கெடுப்பு அறிக்கை தாமதம்: காரணம் வெளியானது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட, குரங்கினக் கணக்கெடுப்பின் இறுதி அறிவிப்பு தாமதமாகி வருகிறது.

தரவு சேகரிப்பு மற்றும் சரிபார்ப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இறுதி புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, குறித்த கணக்கெடுப்பின் வரைவு அறிக்கை, 2025 மார்ச் 28 அன்று விவசாய அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படவிருந்தது.

இந்தநிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், அது எந்தளவுக்கு நம்பகத்தன்மையை கொண்டிருக்கும் என்பதில் தற்போது சந்தேகம் நிலவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button