News

இலங்கையில் கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம் – 2 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம் - 2 பேர் உயிரிழப்பு | Covid 19 Death Toll In Sri Lanka Today

இலங்கையில் (Sri lankan) கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9 முதல் 13 சதவீத வரை தற்போது புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக துஷாந்த மெதகெதர குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இந்த COVID-19 தொற்று மிகக் குறைந்த தீவிர நிலையில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மிகக் குறைவு.

இருப்பினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இது தீவிரமாக இருக்கலாம்.

இந்நிலையில், இலங்கையில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளன. அதைத் தவிர, தற்போது எங்களுக்கு ஒரு தீவிரமான சூழ்நிலை இல்லாததால் தேவையில்லாமல் பீதி அடையத் தேவையில்லை என வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button