வெடித்த போர் – எகிறிய கச்சா எண்ணெய் விலை

இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் உயர்ந்துள்ளன.
Brent Crude எண்ணெய் விலை 5% வரை உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 75 டொலரைத் தாண்டியுள்ளதுடன் இது வாரங்களுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகக் கருதப்படுகிறது.
இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் ஈரானை தாக்கியதை அடுத்து, வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை 5% க்கும் அதிகமாக உயர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலான அதிகபட்ச விலை உயர்வை பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 5.35% உயர்ந்து 75.65 டொலராகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் 5.86% உயர்ந்து 72.03 டொலராகவும் உயர்ந்தது.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) போன்ற முக்கிய எண்ணெய் கடத்தும் பாதைகளில் பதற்றம் உருவானால், அது உலகம் முழுவதும் எண்ணெய் விலையை பாதிக்கும்.
மோதல் மேலும் தீவிரமாகுமானால், எண்ணெய் விலை $80க்கும் மேல் செல்லும் வாய்ப்பு இருக்கிறது என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.