News

தயாராக இருங்கள்..! ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு

கனடாவில் (Canada) நடந்த G7 உச்சிமாநாட்டிலிருந்து திரும்பும் போது, தேசிய பாதுகாப்பு சபை தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டமானது, வெள்ளைமாளிகையில் பாதுகாப்பு மற்றும் அவசர நிலை முடிவுகளுக்காக பயன்படுத்தப்படும் உயர் பாதுகாப்பு வாய்ந்த அறையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, குறித்த தகவலை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று இரவு G7 உச்சிமாநாட்டிலிருந்து ஒரு நாள் முன்னதாகவே புறப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

தெஹ்ரானில் வசிப்பவர்களை வெளியேறுமாறு அவர் எச்சரித்ததன் பிறகு இந்த அதிரிடி அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button