News

கொழும்பு டொக்கியார்ட்டின் பங்குகளை வாங்கப்போகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.எல் என்ற மசகான் டொக் ஷசிப் பில்டர்ஸ், கொழும்பு டொக்கியார்ட் பி.எல்.சியின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி கொழும்பு டொக்கியார்ட்டின் பங்குகளில் இந்திய ரூபாயில் 452 கோடி அதாவது 52.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக குறித்த இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பங்குக்கொள்வனவுக்கு நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழுவும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button