இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளிப்படுத்திய விடயம்

இலங்கையின் அதிகாரிகள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கினால், முன்னேற்றத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும் செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழ் இலங்கையின் பொருளாதார மீட்சி முன்னேற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டுகிறது.
இலங்கையின் சீர்திருத்த முயற்சிகள் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன. முக்கிய சீர்திருத்தங்கள் உறுதியான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன என்றும் ஒகமுரா குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன,பொருளாதார வளர்ச்சி வலுவடைகிறது, பணவீக்கம் குறைவாகவே உள்ளது, இருப்புக்கள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் அதிகாரிகள், தமது நிதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று கென்ஜி ஒகமுரா வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் கடுமையான சவால்களை எதிர்கொண்ட ஒரு பொருளாதாரத்திற்கு இந்த முன்னேற்றங்கள் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மீட்பு உத்தியின் ஒரு மூலக்கல்லான கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிறைவடையும் தருவாயில் உள்ளது. எனவே, மீதமுள்ள அதிகார பூர்வ மற்றும் வணிக கடன் வழங்குநர்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்வதன் முக்கியத்துவத்தை ஒகமுரா வலியுறுத்தியுள்ளார்.
வரி விலக்கு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நிலையான வருவாய் திரட்டலின் அவசியத்தையும் ஒகமுரா வலியுறுத்தினார்.
இலங்கையின் பொருளாதார திறனைத் திறக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அவர், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் பல்வகைப்படுத்தலை அதிகரிக்க நிர்வாக சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்தவும், வர்த்தக-வசதி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும் செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா வலியுறுத்தியுள்ளார்.