விரைவில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்…! அரச தரப்பு அறிவிப்பு

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (Prevention of Terrorism Act) எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கருத்து சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றை பாதுகாக்கும் வகையிலும் சர்வதேச நியமனங்களுக்கு அமையவும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்க்கின்றோம் என்றும் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.
இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டது.
அக்குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.
அந்தவகையில் செப்டம்பர் மாதமளவில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.