News

விதிகளை மீறுவோருக்கு பயிற்சி வகுப்பு: சாரதிகளுக்கு வரும் புதிய கட்டுப்பாடு

வீதி குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட சாரதிகள் அடுத்த ஆண்டு முதல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சிப் பாடத்திட்டத்தை முடித்த பின் இடைநீக்க காலத்தை நிறைவு செய்த சாரதிகளுக்கு நீதிமன்றங்கள் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீதி குற்றங்களைச் செய்யும் சாரதிகளுக்கான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த சட்ட அதிகாரம் இருந்தாலும் ,அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றும், அதற்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதன்படி, செயல்பாட்டுத் திட்டத்தில் அதைச் சேர்த்து 2026 முதல் தொடங்க அமைச்சு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீதி போக்குவரத்து குற்றங்களைச் செய்யும் சாரதிகளை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் முறை மற்றும் பயிற்சி வகுப்புகள் மூலம் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்குவதே முதன்மை நோக்கம் எனவும் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button