News

இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தல்!

மாகாண சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என உறுதியாக நம்புகின்றோம்.

தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு எமது அரசுக்கு உள்ளது. அதனை நோக்கிப் பயணிப்போம். ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு நல்லிணக்கம் நோக்கி விரிவான பயணம் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button