News

வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புகள்: இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கை மற்றும் தென் கொரியா அரசுகளுக்கிடையேயான புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையர்களுக்காக பல தற்காலிக வேலை வாய்ப்புகள் தென் கொரியாவில் உருவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

அதன்படி, தென் கொரியா அரசு, உயர்ந்த சம்பளமும் தரமான வேலைகளையும் இலங்கை தொழிலாளர்களுக்குத் தர ஒப்புக்கொண்டுள்ளது.

E-8 விசா வகையின் கீழ் வேலை வழங்குவதற்காக பொசோங் (Bosong) உள்ளூராட்சி அரசாங்கத்துடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

இதற்கான நினைவூட்டுக் கடிதத்தை (MoU) கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனை, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் மூலம் முன்வைக்கப்பட்டது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை தொழிலாளர்கள் பொசோங் மாகாணத்தின் வேளாண் கிராமங்களில் 8 மாதங்கள் வரை வேலை செய்யலாம்.

இதேவேளை, தென் கொரியாவின் யொங்வொல் (Yongwol) மாகாணத்துடனும் MoU கையெழுத்திட ஜூலை 1ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வேலைக்கான விண்ணப்ப முறைகள் மற்றும் தேவையான தகைமைகள் குறித்த விபரங்கள் சட்டபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுவரை, அரச அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு பொதுமக்களுக்கு SLBFE கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பொய்யான வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு பண மோசடி செய்யும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க SLBFE எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button