News

தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: நடைமுறையாகும் புதிய விதிமுறை

தொடருந்து பற்றுச்சீட்டு முன்பதிவுகளுக்கு இலங்கை தொடருந்து திணைக்களம் கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய முறையின்படி, முன்பதிவின் போது, அனைத்து உள்ளூர் பயணிகளும் தங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை வழங்க வேண்டும்.

அத்தோடு, வெளிநாட்டினர் நிகழ்நிலையில் அல்லது கவுண்டர்களில் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது தங்கள் கடவுச்சீட்டு எண்ணை வழங்க வேண்டும்.

அதன்படி, உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டினர் ஏறும் போதும் பற்றுச்சீட்டு சோதனைகளின் போதும் சரிபார்ப்புக்காக அசல் ஆவணங்களை ( NIC, Passport) வழங்க வேண்டும்.

இந்த விதிமுறை அனைத்து வழித்தடங்களிலும் உள்ள இன்டர்சிட்டி, நீண்ட தூரம் மற்றும் பிரீமியம் தொடருந்து சேவைகளில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.

இது சட்டவிரோத மறுவிற்பனை நடவடிக்கைகளை அகற்றவும், குறிப்பாக கண்டி-எல்ல போன்ற பிரபலமான சுற்றுலா வழித்தடங்களில் விலைகளை உயர்த்தும் கறுப்பு சந்தை விற்பனையை நிறுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button