News

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியான தகவல்

கொழும்பு (Colombo) மற்றும் அதனை சூழவுள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரவித்துள்ளனர்.

மேல்மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையக பகுதிகளில் இருந்து வரும் மரக்கறிகள் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு வரப்படாமையால் அந்த நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு பொருளாதார நிலையங்களுக்கு பெருமளவிலான மரக்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

ஆனால் கொழும்பு மற்றும் கம்பஹா (Gampaha) போன்ற பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மொத்த வியாபாரிகள் கப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்திற்கு வராததால் மலையக விவசாயிகள் பயிர்களை மொத்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கப்பெட்டிபொல (Keppetipola) விசேட பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், கொழும்புக்கான மரக்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், நாரஹேன்பிட்டி உட்பட பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளன.

பீன்ஸ் கிலோ ஒன்றின் விலை 480 முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ வெண்டைக்காய் விலை 200 முதல் 280 ரூபா வரையிலும், மீன் மற்றும் மிளகாய் கிலோ ஒன்றின் விலை 600 முதல் 800 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது மற்றும் ஒரு கிலோ தக்காளியின் விலை 250 முதல் 360 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இருப்பினும், கரட் மற்றும் பீட்ரூட் காய்கறிகளின் விலை 160 முதல் 200 ரூபாய் வரையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button