இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 25 ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (Vehicle Importers Association of Sri Lanka) தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே (Prasath Manage) தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.