News
இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 2,018,996ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள் 0.6 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.