News
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு.!

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள (Department of Examinations) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், பல நடைமுறை சிக்கல்களே தாமதத்திற்குக் காரணம் என்று பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 முதல் டிசம்பர் 31, 2024 வரை நாடு முழுவதும் 2312 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
அத்துடன், இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.