News

கடும் மின்னல் தாக்கம்: மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம்: மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை | Today S Weather Heavy Rain With Thunderstorms Sl

மின்னல் தாக்கம் குறித்து 5 மாவட்டங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (15) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

அதன்படி, மேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)  இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button