News
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

மின்சார கட்டணங்களை அதிகரிக்கும் முன்மொழிவில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது, இழப்புகளை சரிசெய்ய மின்சார கட்டணங்களை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, ஒப்புதல் அளிக்கப்பட்டால் ஜூன் முதலாம் திகதி முதல் மின் கட்டண திருத்தம் செயல்படுத்தப்படும் என்றே கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மாத்திரம் 18 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், மின்சார சபை 84 பில்லியன் ரூபாய் லாபத்தை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.