News

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள சுற்றறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொருத்தமான மாணவர்கள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இந்த சுற்றறிக்கை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான மற்றும் முறையற்ற முறைகள் மூலம் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button