News

குறைந்த விலை அரிசி : அமைச்சர் வெளியி்ட்ட தகவல்

இந்தியாவிலிருந்து (India) இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில், இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ. ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது.

இந்தியாவிலிருந்து 40ஆயிரம் மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படும்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும்,சீரற்ற வானிலை மற்றும் ஏனைய காரணங்களால் அவை தடைப்படுமிடத்து, அரிசி இறக்குமதி செய்யப்படும் என, வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button