News
பாடசாலை நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் – மாணவர்களின் நிலை என்ன!

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு பாடநேரமும் 45 நிமிடங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 பாடங்கள் கற்பிக்கப்பட்ட நிலையில் 6 பாடங்களாக மாற்றம் பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறு பாடவேளைகள் மாற்றம் பெற்றுள்ளமையால் தங்களுக்கு படிப்பதற்கு அதிக நேரம் கிடைத்துள்ளது என்று மாணவியொருவர் குறிப்பிட்டுள்ளார்.