Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கையில் பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை அறிமுகம்

இலங்கையில்(Sri Lanka) இந்த வருட இறுதிக்குள் தொடருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான பயணச்சீட்டு வழங்கும் இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க (Ranjith Ganganath Rubasinghe) தெரிவித்துள்ளார்.

அதிபர்  ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு மாத்திரம் கடந்த இரண்டு வருடங்களில் 390 பில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் வெற்றியானது நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது என்றே கூற வேண்டும். இதன் மூலம் கடந்த நெருக்கடியின் போது பாதியில் நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்க முடியும்.

குறிப்பாக, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை முன்கூட்டியே தொடங்குவதற்கான விவாதங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

அத்துடன், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்டம், ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் அதுருகிரிய நெடுஞ்சாலைத் திட்டத்தை நிதி முதலீடுகள் மூலம் நிறைவு செய்வது தொடர்பாக இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக பொது தனியார் கூட்டு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் தொடருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான பயணச் சீட்டுகளை வழங்கும் மின்னணு முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முழு நெடுஞ்சாலை கட்டணமும் சில மாதங்களில் மின்னணு முறையில் செய்யப்படும்.

மேலும், இலகு தொடருந்து திட்டத்திற்கான (LRD) முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து ஜப்பான் (Japan) அரசாங்கத்துடன் பூர்வாங்க விவாதங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையில், அவர்கள் பல புதிய திட்டங்களுக்காக சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அடுத்த ஐந்தாண்டுகளில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையை 10%-15% என்ற அளவில் வளர்ச்சியடையச் செய்வதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.“ என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button