Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட சட்டங்கள் குறித்து ஐ.நா கடும் அதிருப்தி

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இணைய பாதுகாப்புச்சட்டம் மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையச்சட்டம் குறித்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளுக்கான சிறப்பு அறிக்கையாளர் ஐரீன் கான், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் மற்றும் சங்கத்தின் உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் கிளமென்ட் நியாலெட்சோசி வோல் மற்றும் தனியுரிமைக்கான சிறப்பு அறிக்கையாளர் அனா பிரையன் நௌக்ரெஸ் ஆகியோர், அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இணைய பாதுகாப்புச்சட்டம் மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையச்சட்டம் சர்வதேச சட்டம் மற்றும் தரநிலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மனித உரிமைகள் உலகளாவிய பிரகடனம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் போன்றவற்றில் சாத்தியமான மீறல்கள் உள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இணைய பாதுகாப்புச்சட்டத்தின் பல விதிகள் தெளிவற்றதாக உள்ளன.

முன்மொழியப்பட்ட சட்டம், இணைய வெளிப்பாட்டின் நோக்கத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தலாம் மற்றும் எந்தவொரு தனிநபர்களுக்கும், குறிப்பாக ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கு பெரும் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்றும் அந்த சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் மக்களை நோக்கியதாக தெரிகிறது. இது பரந்த அளவிலான தனிநபர்களின் கருத்து சுதந்திரத்தின் மீது கடுமையான, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

முன்மொழியப்பட்ட ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையச்சட்டம் தொடர்பில் கருத்துரைத்துள்ள சிறப்பு அறிக்கையாளர்கள்,

ஆணையத்தின் நியமனச்செயல்முறை, அதன் தற்போதைய வடிவத்தில் செயல்படுத்தப்பட்டால், நிர்வாக அதிகாரிக்கு தண்டனை அளிக்கும் மற்றும் ஊடகங்களுக்கு உரிமங்களை மறுக்கும் திறனைக் கொடுக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனவே கண்காணிப்பு பொறிமுறையானது எந்தவொரு அழுத்தங்கள் அல்லது அரசியல் உறவுகளிலிருந்தும் சுயாதீனமான ஒரு தன்னாட்சி அமைப்பாக இருப்பது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க, சர்வதேச தரங்களின்படி, ஊடக சுதந்திரத்தை அரசு மதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்மொழியப்பட்ட இணையப்பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையச்சட்டம் ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களை திரும்பப்பெறுதல், பொது ஆலோசனை மற்றும் கணிசமான மதிப்பாய்வு ஆகியவற்றை சிறப்பு அறிக்கையாளர்கள் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button